Tuesday, July 4, 2017

ஹோம் ரூல் இயக்கம்

நவீனகால இந்தியா : ஹோம் ரூல் இயக்கம்

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் சுய ஆட்சி
தேசியக் கல்வி சமூக பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்காகப் பாடுபடுவது.
திலகர், சுயராஜ்யக் கோரிக்கையோடு மொழிவாரி மாநிலங்களையும், தாய்மொழிக் கல்வியையும் ஆதரித்தார்.
சாதி உணர்ச்சியை ஒழிப்பது, தீண்டாமையை அழிப்பது ஆகியவற்றுக்காகவும் திலகர் ஹோம் ரூல் இயக்கத்தைப் பயன்படுத்தினார்.
ஹோம் ரூல் சங்கத்தைத் திலகர் (ஏப்ரல்) அன்னிபெசன்ட் மற்றும் S. சுப்பிரமணி ஐயர் (செப்டம்பர்) ஆகியோர் 1916 – ல் நிறுவினர்.
திலகரின் சங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மைய மாநிலங்கள், பெரார் ஆகிய பகுதிகளிலும் அன்னிபெசன்டின் சங்கம் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இயங்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அன்னிபெசன்ட், நியூ இந்தியா, காமன்வீல், யங் இந்தியா ஆகிய பத்திரிக்கைகளைத் தொடங்கினார் (1916) திலகர் மராத்தா மற்றும் கேசரி ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டார்.
ஜம்னாதாஸ் த்வாரக்தாஸ் ஷங்கர்லால் பங்கர், இந்துலால் யக்னிக் ஜார்ஜ் அருண்டேல் B.P. வாடியா, C.P. ராமசாமி ஐயர் ஆகியோர் பெசன்ட்டின் சங்கத்தில் இருந்தனர்.
மாண்ட்போர்டு சீர்திருத்தத்தை பெசன்ட் ஒப்புக்கொண்டதாலும் திலகர் ஒரு வழக்கின் தொடர்பாக இங்கிலாந்து சென்றதாலும் ஹோம்ரூல் இயக்கம் தளர்ச்சியடைந்தது.

No comments:

Post a Comment