Sunday, February 18, 2018

TNPSC Corrections

வணக்கம்,

** TNPSC கொடுத்துள்ள உத்தேச விடையில் உள்ள தவறான விடைகளுக்கு  எப்படி மெயில் அனுப்ப வேண்டும்? என்று ஒரு வினாவிற்கு மட்டும் தயாரித்து உள்ளேன், இதனை அப்படியே காபி செய்து, இந்த விண்ணப்பத்தின் இறுதியில் உங்கள் பெயர், பதிவு எண், ஊர் ஆகியவற்றை மாற்றி இன்றே கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரிகளுக்கு மெயில் அனுப்பவும்.

** முக்கியமாக நான் கொடுத்துள்ள நான்கு புகைப்படங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும், இணைக்க மறந்து விட வேண்டாம்.

** உங்களுக்கு வேறு தவறான வினாக்கள் இருப்பது தெரிந்தால் இது போன்று உரிய விளக்கம் மற்றும் ஆதாரத்துடன் மெயில் அனுப்பவும்.

மின் அஞ்சல் முகவரிகள்:
coetnpsc.tn@nic.in, 
contacttnpsc@gmail.com

மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 21.02.2018, 11.59 PM

** என் பெயரை எடிட் செய்து உங்கள் பெயரில் அனுப்பவும், எனது பெயரிலேயே அப்படியே அனுப்பி விடாதீர்கள், பதிவு எண் மிக முக்கியம்.

** இக் கேள்வியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் மெயில் அனுப்ப வேண்டும். இதுவும் ரொம்ப முக்கியம்.

** சொல்லப் போனால், இது போன்ற தவறான விடைகளை ஆராய்ந்து முடிவு செய்யப்பட்ட இறுதி விடைச் சாவியை (FINAL ANSWER KEY) வெளியிட வேண்டும். ஆனால் அவ்வாறு TNPSC செய்வது இல்லை, மற்றபடி, தேர்வு முடிவின் போது உங்களுக்கு கூடுதல் மதிப்பெண் கொடுத்து விடுவார்கள்.

** நல்லதே நடக்கும் என்று நம்புவோம். நன்றி.

அன்புள்ள
அஜி
சென்னை.

PLEASE SHARE IT.
-----------------------------------------------------------------------------------------

மதிப்பிற்குரிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு,

வணக்கம்.

கடந்த 11.02.2018 அன்று நடைபெற்ற CCSE-04 தேர்வில் பொதுத் தமிழ் பகுதியில்,  கீழ்க்கண்ட  வினா  கேட்கப்பட்டு இருந்தது:

பொருந்தாத சொல்லைக் கண்டறிதல்: மாணிக்கம், முத்து ,பவளம், கிளிஞ்சல்
(A) மாணிக்கம்
(B) முத்து
(C) பவளம்
(D) கிளிஞ்சல்

(பார்க்க இணைக்கப்பட்ட புகைப்படம்  1)

கடந்த புதன் (13.02.2018) அன்று  TNPSC வெளியிட்டுள்ள உத்தேச விடைச் சாவியில் இக் கேள்விக்குப் பதிலாக "கிளிஞ்சல்" என்று குறிக்கப்பட்டு உள்ளது. (பார்க்க இணைக்கப்பட்ட புகைப்படம்  2).

கிளிஞ்சல் தவிர மற்ற மூன்றும் (முத்து, பவளம், மாணிக்கம்) நவரத்தின வகையினைச் சார்ந்தது என்றும் "கிளிஞ்சல்" அந்த வகையில் பொருந்தாதது என்பது போல பொருள் கொண்டு நீங்கள் அந்த விடையை தேர்ந்து எடுத்து போல் உணர முடிகிறது.

ஆனால்  ஒன்பதாம் வகுப்பு, பருவம் - 3ற்கான சமச்சீர் புத்தகத்தில், இடம் பெற்றுள்ள "உயிர்க் கோளம் " என்ற பாடத்தில், பக்கம் 67 ல், கடலில் இருந்து கிடைக்கும் பொருட்கள் என்று " முத்து, பவளம், கிளிஞ்சல், கடற்பஞ்சு, சங்கு" என கொடுக்கப்பட்டு உள்ளது, (பார்க்க இணைக்கப்பட்ட புகைப்படம்  3).

மேலும் அந்தப் பாடத்தினைத் தொடர்ந்து வரும் பயிற்சி வினாவில், பக்கம் 89-ல் , இதே கேள்வி கொடுக்கப்பட்டு உள்ளது, அதில் கடலில் இருந்து கிடைக்கும் பொருட்களில் பொருந்தாத சொல்லாக "மாணிக்கம்" கொடுக்கப்பட்டு உள்ளது (பார்க்க இணைக்கப்பட்ட புகைப்படம்  4) .

எனவே  பெரும்பாலான தேர்வர்கள் சமச்சீர் புத்தகத்தின் அடிப்படையில், கடலில் இருந்து கிடைக்கும் பொருட்களில் பொருந்ததாக மாணிக்கத்தினை விடையாக அளித்துள்ள படியால் , இந்த விடையையும் கருத்தில் கொண்டு தேர்வர்கள் பாதிக்கப் படாதவாறு மேற்கண்ட  கேள்விக்கு உரிய மதிப்பெண் வழங்குமாறு  பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள
அஜி, (Ur full Name with initial)
பதிவு எண்: 00000000   (UR register number)
சென்னை. (Ur Place)
நாள்: 18. 02.2018
----------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment