Wednesday, July 28, 2021

*ஒலிம்பிக் போட்டி*

*👆உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிக்கான கொடி பிறந்த வரலாறு* உங்களுக்கு தெரியுமா?


இதுகுறித்த ஒரு பார்வை: ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உலகத்தின் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் ஏராளமான வீரர்கள் ஒலிம்பியா நகரத்தில் குழுமினார்கள். போட்டியில் வென்ற வீரர் களுக்கு அந்த காலத்தில் வெற்றியின் சின்னமாக அணிவிக்கப்படும் ஆலிவ் இலைகளினால் ஆன கிரீடம் அணிவிப்பார்கள்.
வெள்ளை நிறத்தில் உள்ள ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தபடி அமைந்திருக்கும்.
நவீன ஒலிம்பிக் போட்டியை ஒருங்கிணைத்தவரான பியர்ரி டி குபர்டீன் என்பவரால் 1912ம் ஆண்டு, இந்த கொடி உருவாக்கப்பட்டது.
இந்த 5 வளையங்களும், ஆசியா-ஐரோப்பா, ஆப்பிரிக்கா, இரு அமெரிக்கா கண்டங்கள், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய கண்டங்களை குறிப்பதாக சமீபகால வரலாறு கூறுகிறது. ஆனால் முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற
உலக நாடுகளின் கொடியில் இடம்பெறும் பொதுவான வண்ணங்களைக் கொண்டு வளையங்களுக்கு வண்ணம் தேர்வு செய்யப்பட்டதாக அறியலாம்.
அனைத்து மக்களிடையே விளையாட்டு மூலம் நட்புறவை குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டவைதான் இந்த ஒலிம்பிக்கொடி. இதனால்தான் வளையங்கள் பிணைக்கப்பட்டுள்ளன.