Thursday, June 29, 2017

சி.என். அண்ணாதுரை

இந்திய தேசிய இயக்கம் : சி.என். அண்ணாதுரை

சி.என். அண்ணாதுரை
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
டாக்டர் எஸ். தருமாம்பாள்
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
சி.என். அண்ணாதுரை

தமிழக மக்களால் அன்புடன் பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை, 1909 ஆம் ஆண்டு, செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
இவர் தனது எம்.ஏ பட்டத்தை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முடித்தார்.
இவர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் ஆவார்.
அண்ணா, நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார்.
சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற தாக்கமே இவரை நீதிக்கட்சியில் இணைய வைத்தது.
இவர் சாதி மற்றும் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் தன்னை நீதிக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அண்ணா ஒரு சிறந்த பேச்சாளர், அக்காலத்தில் புகழ்பெற்ற பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
நீதிக்கட்சியில் இணைந்த போது பெரியாரின் பேச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
நீதிக்கட்சியில் இணைந்த போது பெரியாரின் தலைமையின் கீழ் பணிபுரியும் பாக்கியம் கிடைத்தது.
நீதிக்கட்சி இவருக்கு சரியான பாதையைக் காட்டி சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபடச் செய்தது.
இதன்மூலம் சமுதாயத்தில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பணியைத் தொடங்கினார்.
தமிழ்மொழி மீது அதிக பற்று கொண்ட அண்ணா, காஞ்சிபுரத்தில் பெரியாரால் துவங்கப்பட்ட இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இந்தி மொழிக்கெதிராக குரல் எழுப்பினார்.
நன்கு வளர்ச்சியடைந்த தமிழின் இடத்தை இந்தி ஒரு போதும் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் முழங்கினார்.
1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றினார்.
இதன் மூலம் பெரியார்க்கு மிகவும் நெருக்கமானார்.
1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் – மணியம்மை திருமணம் திராவிடக் கட்சிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா அவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் திராவிடமுன்னேற்றக்கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளை தெளிவாக எடுத்துரைத்தார்.
இவர் தி.மு.க. வின் பொதுச்செயலாளர் ஆனார்.
இவர் 1967 – ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிபெற்ற, அண்ணா தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
தனது ஆட்சிக்காலத்தில் படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
(ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி)
ஆனால் நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த இயலவில்லை official site.
அண்ணா தமிழ்மொழி வளர்ச்சித் திட்டத்தை அறிவித்தார்.
சித்திரை முதல் தேதியை தமிழ் புது வருட நாளாக அறிவித்தார்.
(14.04.1967) 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு அல்லது தமிழகம் என பெயர் மாற்றம் செய்தார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள செக்ரடேரியட் என்பதை தலைமைச்செயலகம் எனப் பெயர் மாற்றம் செய்தார்.
அதே தேதியில் சத்யமேவ ஜெயதே என்ற அரசுக் குறிக்கோளை வாய்மையேவெல்லும் என்று மாற்றி அறிவித்தார்.  இது போன்று ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் குமாரி  போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு, திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ் சொற்களை அறிவித்தார்.
அண்ணாவின் தலைமைப் பண்பு, நிர்வாக நேர்மை, அரசியல் பண்பாடு ஆகியவற்றை சிறப்பிக்கும் வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1968 ஆம் ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து அண்ணாவைப் பாராட்டியது.
இத்தகைய பெருமைமிகு அண்ணாதுரை, பிப்ரவரி 3, 1969 – ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment