Tuesday, June 27, 2017

வரலாறு

முகலாயர் மரபு பற்றிய சில தகவல்கள் :-
1. பாபர்
2. உமாயூன்
3. அக்பர்
4. ஜகாங்கீர்
5. ஷாஜகான்
6. ஔரங்கசீப்

1. பாபர்:-

💠 முதலாய மரபின் முதல் அரசர் - பாபர்

💠 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு வெளிப்படையாக அழைப்பு விட்டவர் - தௌலத்கான் லோடி

💠 பாபர் முழுபெயர் - ஜாகிருதின் முகமது பாபர்

💠 பாபர் என்பதன் பெயர் - புலி

💠 பாபர் தந்தை பெயர் - உமர் சேக் மிர்சா

💠 பாபர் இருமுறை படையெடுப்பு தோல்வி கண்ட நகரம் - சாமர்கண்ட்

💠 முதல் பானிப்பட் போர் யார்யார்க்கு இடையே நடைபெற்றது - பாபர் Vs இப்ராகிம் லோடி

💠 இந்தியாவில் முதல் முதலில் பீரங்கி பயன்படுத்தப்பட்ட போர் - முதல் பானிபட் போர்

💠 பாபர் இயற்றிய அவர் சுயசரிதை - பாபர் நாமா (பாபர் நினைவுகள்)

💠 பாபர் மகன்  பெயர் - உமாயூன்

2. உமாயூன்:-

💠 உமாயூன் சகோதரர்கள் பெயர் - காம்ரான், அஸ்காரி, இந்தால்

💠 உமாயூன் என்பதன் பொருள் - அதிர்ஷ்டம்

💠 உமாயூன் மனைவி பெயர் - அமிதா பானுபேகம்

💠 உபயோகிக்கும் அமிதா பேகத்திற்கும் பிறந்தவர் - அக்பர்

3. அக்பர்:-

💠 அக்பர் பிறந்த இடம் - அமரக்கோட்டை

💠 அக்பர் அறியணை ஏறும் போது வயது - 14

💠 இரண்டாம் பானிபட் போர் யார்யார்க்கும் இடையே நடைபெற்றது - அக்பர் Vs எமு (எ) ஏமசந்திரன்

💠 அக்பரின் படைத்தளபதி - பைராம்கான்

💠 அக்பரின் வளர்ப்பு தாய் - மாகம் அனகா

💠 அக்பரின் மனைவி பெயர் - ஜோத்பாய்

💠 அக்பர் யாருடைய முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்தார் - சேக் முபாரக்

💠 தீன் இலாஹி என்ற தெய்வீக சமயத்தை தோற்றுவித்தவர் - அக்பர்

💠  அக்பர் சுயசரிதை  - அக்பர் நாமா (அயனி அக்பரி)

💠 அக்பர் நாம இயற்றியவர் - அபுல் பாசல்

💠 அக்பர் அவையில் இருந்த பாடகர் - தான்சேன்

💠  அக்பர் அவையில் இருந்த நகைச்சுவை மேதை - பீர்பால்

💠 முகலாய மரபில் சிறந்த அரசர் - அக்பர்

💠 ஜசியா வரி நீக்கியவர் - அக்பர்

💠 மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் - அக்பர்

💠 அக்பர் மகன் பெயர் - ஜகாங்கீர்

4. ஜகாங்கீர்:-

💠 ஜகாங்கீர் இயற்பெயர் - சலீம்

💠 ஜகாங்கீர் என்பதன் பொருள் - உலகை வென்றவர்

💠 ஜகாங்கீர் சுயசரிதை - துசிக்கி ஜகாங்கீரி

💠 அரண்மனை வெளிவாயிலில் மிகப்பெரிய மணி ஒன்றை கட்டி ஆட்சி செய்தவர் - ஜகாங்கீர்

💠 ஜகாங்கீர் மூத்த மகன் - குஸ்ரு

💠 ஜகாங்கீரால் கொல்ல பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன் தேவ்

💠 ஜகாங்கீர் மனைவி பெயர் - நூர்ஜஹான்

💠 நூர்ஜஹான் இயற்பெயர் - மெகருன்னிசா

💠 நூர்ஜஹான் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலகின் ஒளி

💠 மெகருன்னிசா முதல் கணவர் - செர் ஆப்கான்

💠 ஜகாங்கீர் மகன்கள் - குர்ரம், ஷாரியார்

5. ஷாஜகான்:-

💠 ஷாஜகான் இயற்பெயர் - குர்ரம்

💠 குர்ரம் என்பதன் பொருள் - உலகின் அரசன்

💠 முகலாயர் மரபில் பொற்காலம் யாருடைய ஆட்சிகாலம் - ஷாஜகான்

💠 ஷாஜகான் கட்டிய கட்டிடங்கள் - தாஜ்மஹால், ஜும்மா மசூதி, செங்கோட்டை

💠 ஷாஜகான் கட்டிய மிக பெரிய பள்ளிவாசல் - ஜும்மா மசூதி

💠 ஜகாங்கீர் கல்லறையை கட்டியவர்  - ஷாஜகான்

💠 ஷாஜகான் இருந்த விலைமதிப்புள்ள ஆசனம் - மயிலாசனம்

💠 ஷாஜகான் மனைவி பெயர் - மும்தாஜ்

💠 ஷாஜகான் மகன்கள் பெயர் - தாரா, சுஜா, மூரத்

💠 ஷாஜகான் பின் ஆட்சிக்கு வந்தவர் - ஔரங்கசீப்

6. ஔரங்கசீப்:-

💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட அவர் சகோதரர்கள் - தாரா, சுஜா, மூரத்

💠 அரசுபதவி இரத்தபாசம் அறியாது என்பதை நிருபித்தவர் - ஔரங்கசீப்

💠 ஔரங்கசீப் சேர்ந்த முஸ்லிம் பிரிவு - சன்னி

💠 தினமும் திரு குரான் படிக்கும் வழக்கம் உடையவர் - ஔரங்கசீப்

💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு - குரு தேஜ்பகதூர்

💠 ஜசியா வரியை மீண்டும் விதித்தவர் - ஔரங்கசீப்

💠 ஔரங்கசீபிற்கு புற்றுநோய் போல் அமைந்த படையெடுப்பு - மராத்தியர் படையெடுப்பு

💠 முகலாய அரசின் கடைசி பேரரசர் - ஔரங்கசீப்


தொண்டைமான்கள் பற்றிய சில தகவல்கள் :-

💠 புதுகோட்டையில் தொண்டைமான்கள் இராஜ்யத்தை ஏற்படுத்தியவர் - கிழவன் சேதுபதி

💠 கிழவன் சேதுபதி மகன் - இரகுநாத ராஜா தொண்டைமான்

💠 தொண்டைமான்களில் முதல் ஆட்சியாளர் - இரகுநாத ராஜா தொண்டைமான்

💠 தொண்டைமான்கள் தலைநகர் - புதுக்கோட்டை

💠 புதுக்கோட்டை தொண்டைமானின் சுதந்திர ஆட்சியை அங்கீகரித்தவர் - ஹைதராபாத் நிஜாம்

💠திப்புசுல்தான் எதிராக ஆங்கில அரசுக்கு உதவி செய்தவர் - இரகுநாத ராஜா தொண்டைமான்

💠 இரகுநாத ராஜா தொண்டைமான் பின் ஆட்சிக்கு வந்தவர் - விஜய இரகுநாத தொண்டைமான்

💠 விஜய இரகுநாத தொண்டைமானுக்கு ஆற்காடு நவாப் அளித்த பட்டம் - ராஜா பகதூர்

💠 விஜய இரகுநாத தொண்டைமான் பிறகு ஆட்சிக்கு வந்தவர் - இராமசந்திர தொண்டைமான்

💠 இராமசந்திர தொண்டைமான் பின் ஆட்சிக்கு வந்தவர் - மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்

💠 ஆங்கில மற்றும் இந்தி மொழிக்காக இலவச பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

💠 சின்னம்மை நோய்க்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

💠 புதுக்கோட்டை இந்தியாவுடன் இணைக்க பட்ட ஆண்டு - 1948


தஞ்சை நாயக்கர்கள் பற்றிய சில தகவல்கள்:-

💠 தஞ்சை நாயக்கர் மரபு தோற்றிவித்தவர் - செவப்ப நாயக்கர்

💠 தஞ்சையில் உள்ள ஏரியை சீர்படுத்தி புதுப்பித்தவர் - செவப்ப நாயக்கர்

💠 செவப்ப நாயக்கர் மகன் பெயர் - அச்சுதப்ப நாயக்கர்

💠 செவப்ப நாயக்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - அச்சுதப்ப நாயக்கர்

💠 கும்பகோணம் மகாமகம் குளத்தை புதுப்பித்தவர் - அச்சுதப்ப நாயக்கர்

💠 அச்சுதப்ப நாயக்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - விஜயராகவ நாயக்கர்

💠 தஞ்சை நாயக்கர் மரபில் சிறந்தவர் - விஜயராகவ நாயக்கர்

💠 விஜயராகவ நாயக்கர் தந்தை பெயர் - இரகுநாத நாயக்கர்

💠 விஜயராகவ நாயக்கர் இயற்றிய நூல் - இராகுநாதபயுதயம்


வேளியர்கள் மரபு பற்றிய சில தகவல்கள் :-

💠 வேளியர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார் - குறுநில மன்னர்கள்

💠 வேளியர்களின் சிறந்தவர் - கடையெழு வள்ளல்கள்

💠 கடையெழு வள்ளல்கள் பின் வருமாறு

1. பாரி - பரம்பு மலை
2. ஓரி - கொல்லி மலை
3. காரி - குதிரை மலை
4. எழினி - தகடூர் மலை
5. பேகன் - பழனி மலை
6. ஆய் - பொதிகை மலை
7. நள்ளி - ???

💠 பாரியின் அவைப்புலவர் - கபிலர்

💠 பாரியின் மகள்கள் - அங்கவை, சங்கவை

💠 பாரியின் இறப்பிற்கு பின் அவர் மகள்களை வளர்க்கும் பொறுப்பேற்றவர் - கபிலர்

💠 முல்லைக்கு தேர் கொடுத்தவர் - பாரி

💠 கொல்லி மலையை ஆண்ட மன்னர் - ஓரி

💠 கொல்லிமலை கூத்தர்களுக்கு அதன் நாட்டையே பரிசாக வழங்கியவர் - வல்வில் ஓரி

💠 இரவலருக்கு தனது குதிரையும் நாட்டையும் வழங்கியவர் - மலையமான் திருமுடிக்காரி

💠 எழினி எவ்வாறு அழைக்கப்படுகிறான் - அதியமான்

💠 ஔவையாருக்கு நெல்லி கனி கொடுத்தவர் - அதியமான்

💠 மயிலுக்கு போர்வை கொடுத்தவர் - பேகன்

💠 பேகன் மனைவி பெயர்-  கண்ணகி

💠 அரிதாகக் கிடைத்த ஆடையை, தான் அணியாமல் சிவனுக்கு வழங்கியவர் - ஆய் அண்டிரன்

💠 காட்டிலும், தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கியவர் - நள்ளிகோடன்


நவாப்புகள் பற்றிய சில தகவல்கள்:-

நவாப்புகள் மரபை தோற்றிவித்தவர் - சுல்பிகர்கான்

💠 சுல்பிகர்கான் யாருடைய படைதளபதி - ஔரங்கசீப்

💠 நவாப்புகள் மரபின் தலைநகரம் - ஆற்காடு

💠 சுல்பிகர்கான் படைதளபதி - தாவுத்கான்

💠 சுல்பிகர்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் - தாவுத்கான்

💠 தாவுத்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் - சததுல்லாகான்

💠 சததுல்லாகான் பின் ஆட்சிக்கு வந்தவர் - தோஸ்த் அலி

💠 தோஸ்த் அலி மகன் பெயர் - சப்தர் அலி

💠 தோஸ்த் அலி மருமகன் பெயர் - சந்தா சாகிப்

💠 தோஸ்த் அலி பின் நவாப் ஆனவர் - அன்வர்-உத்-தீன்

💠 அன்வர்-உத்-தீன் எந்த பகுதியை சேர்ந்தவர் - வாலாஜா

💠 சென்னை புனித ஜார்ஜ் கோட்டை யாருடைய காலத்தில் கட்டப்பட்டது - அன்வர்-உத்-தீன்

💠 அன்வர்-உத்-தீன் பின் நவாப் ஆனவர் - சந்தா சாகிப்

💠 அன்வர்-உத்-தீன் மகன் பெயர் - முகமது அலி

💠 சந்தா சாகிப் யார் உதவியுடன் நவாப் ஆனார் - பிரஞ்சுகாரர்கள்

💠 சந்தா சாகிப் பின் ஆட்சிக்கு வந்தவர் - முகமது அலி

💠 முகமது அலி நவாப் ஆக உதவி செய்தவர்கள் - ஆங்கிலேயர்கள்

💠 சந்தா சாகிப் மகன் பெயர் - ராஜா சாகிப்

💠 சென்னையில் அமீர் மஹால் யார் காலத்தில் கட்டப்பட்டது - நவாப் காலத்தில்


 தஞ்சை மராட்டியர்கள் பற்றிய சில தகவல்கள் :-

💠 தஞ்சை மராட்டிய அரசின் முதல் அரசர் - வெங்காஜி

💠 வெங்காஜி வேறுபெயர் - எக்கோஜி

💠 வெங்காஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் ஷாஜி

💠 ஏழை எளியவர்களுக்கு மருத்துவமனை கட்டியவர் -முதலாம் ஷாஜி

💠 முதலாம் ஷாஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் சரபோஜி

💠 சிவகங்கை அரசை சுதந்திர அரசாக அறிவித்தவர் - முதலாம் சரபோஜி

💠 முதலாம் சரபோஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் சரபோஜி

💠 தஞ்சை சரஸ்வதி மகால் கட்டியவர் - இரண்டாம் சரபோஜி

💠 இரண்டாம் சரபோஜி மகன் - சிவாஜி

💠 தஞ்சை மராட்டிய அரசின் கடைசி அரசர் - சிவாஜி

💠 ஷாஜி அவையில் இருந்த புலவர்கள் எண்ணிக்கை - 46

💠 ஷாஜி அவையில் இருந்த தெலுங்கு புலவர்கள் - இராம்பத்ரா, அல்லூரி குப்பண்ணா

💠 தஞ்சையில் அச்சு கூடம் நிறுவியவர் - இரண்டாம் சரபோஜி


சேதுபதிகள் பற்றிய சில தகவல்கள் :-

💠 சேதுபதிகளின் முதல் சேதுபதி - சடைக்க தேவர்

💠 சேது சமுத்திரத்தின் பாதுகாவலர்கள் என்று அழைப்பவர் - சேதுபதிகள்

💠 சேதுபதிகள் தலைநகரம் - இராமநாதபுரம்

💠 இராமநாதபுரம் கோவிலுக்கு சமயத்தொண்டு புரிந்த சேதுபதிகள் - சடைக்க தேவர், குட்டன் சேதுபது

💠 இராமேஸ்வரத்தில் சொக்கநாத சுவாமி ஆலயத்தை கட்டியவர் - இரண்டாம் சடைக்க தேவர்

💠 நவராத்திரி திருவிழா அறிமுகம் செய்தவர் - இரகுநாத சேதுபதி

💠 இரகுநாத சேதுபதிக்கு 'திருமலை சேதுபதி' என பட்டம் வழங்கியவர் - திருமலை நாயக்கர்

💠 இராமநாதன் சாமி கோவிலுக்கு இரண்டாம் பிரகாரம் கட்டியவர் - இரகுநாத சேதுபதி

💠 இரகுநாத சேதுபதி காலத்தில் இருந்த தமிழ் புலவர் - தாயுமானவர்

💠 இரகுநாத சேதுபதி பின் ஆட்சிக்கு வந்தவர் - கிழவன் சேதுபதி (எ) இரண்டாம் சேதுபதி

💠 சேதுபதிகளில் சிறந்தவர் - கிழவன் சேதுபதி

💠 சொக்கநாதர் நாயக்கருக்கு போருக்கு உறுதுணையாக இருந்தவர் - கிழவன் சேதுபதி

💠 கிழவன் சேதுபதிக்கு சொக்கநாதர் நாயக்கர் வழங்கிய பட்டம் - பரராஜகேசரி

💠 பரராஜகேசரி என்பதன் பொருள் - எதிரிகளுக்கு சிங்கம் போன்றவன்

💠 தலைநகரை புகழூரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றியவர் - கிழவன் சேதுபதி

💠 மதுரையில் வகை அணையை கட்டியவர் - கிழவன் சேதுபதி

💠 கிழவன் சேதுபதி பின் ஆட்சிக்கு வந்தவர்கள் - பவானி சங்கர தேவர், தண்டத் தேவர்

💠 விவேகானந்தரை சிக்காக்கோ வில் நடந்த உலக சமய மாநாட்டிற்கு செல்ல உதவி செய்தவர் - பாஸ்கர சேதுபதி


மதுரை நாயக்கர்கள் பற்றிய சில தகவல்கள்:-

💠 மதுரை நாயக்கர்கள் மரபு தோற்றுவித்தவர் - விஸ்வநாதன் நாயக்கர்

💠 விஸ்வநாதன் நாயக்கர் படைதளபதி - தளவாய் அரியநாதர்

💠 பாளையகாரர்கள் முறையை அறிமுக படுத்தியவர் - விஸ்வநாதன் நாயக்கர்

💠 விஸ்வநாதன் நாயக்கர் ஆட்சி காலத்தில் இருந்த பாளையங்கள் - 72

💠 விஸ்வநாதன் நாயக்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - கிருஷ்ணப்ப நாயக்கர்

💠 கிருஷ்ணா புரம் கோயிலை சீர் அமைத்தவர் - கிருஷ்ணப்ப நாயக்கர்

💠 கிருஷ்ணப்ப நாயக்கர் மூத்த மகன் - வீரப்ப நாயக்கர்

💠 திருச்சி கோட்டையை புதுப்பித்தவர் - வீரப்ப நாயக்கர்

💠 வீரப்ப நாயக்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - திருமலை நாயக்கர்

💠 நாயக்கர் மரபில் சிறந்தவர் - திருமலை நாயக்கர்

💠 தலைநகரை திருச்சியில் இருந்து மதுரைக்கு மாற்றியவர் - திருமலை நாயக்கர்

💠 மதுரையில் நாயக்கர் மஹால் கட்டியவர் - திருமலை நாயக்கர்

💠 மதுரையில் நடக்கும் விழாக்களை நகரமயமாக்கியவர் - திருமலை நாயக்கர்

💠 திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட போர் - மூக்கறுப்பு போர்

💠 திருமலை நாயக்கர் பின் ஆட்சிக்கு வந்தவர் - இராணி மங்கம்மாள்

💠 முகலாயர் படையில் இருந்து மதுரையை மீட்டவர் - இராணி மங்கம்மாள்

💠 இராணி மங்கம்மாள் பின் ஆட்சிக்கு வந்தவர் - விஜயரங்க சொக்கநாதர்

💠 விஜயரங்க சொக்கநாதர் பின் ஆட்சிக்கு வந்தவர் - மீனாட்சி

💠 மீனாட்சி கணவன் பெயர் - விஜயரங்க சொக்கநாதர்

💠 விஷம் கொடுத்து கொல்லப்பட்டவர் - மீனாட்சி

💠 மதுரை நாயக்கர்கள் மரபில் கடைசி நாயக்கர் - மீனாட்சி



 பிற்கால சோழ மரபு பற்றிய சில தகவல்கள்:-

💠 பிற்கால சோழ மரபு தோற்றுவித்தவர் - விஜயாலய சோழன்

💠 விஜயாலய சோழன் யாரிடம் இருந்து கைப்பற்றினர் - முத்தரையர்

💠 விஜயாலய சோழன் மகன் - ஆதித்த சோழன்

💠 ஆதித்த சோழன் மகன் - முதலாம் பராந்தக சோழன்

💠 முதலாம் பராந்தக சோழன் பட்டப்பெயர் - *மதுரை கொண்டான்
*மதுரை ஈழமும் கொண்டான்
*பொன்வேய்ந்த சோழன்

💠 முதலாம் பராந்தக சோழன் பற்றி கூறும் கல்வெட்டு - உத்திரமேரூர்

💠 முதலாம் பராந்தக சோழன் பின் ஆட்சிக்கு வந்தவர் - கண்டராதித்தன்

💠 இரண்டாம் பராந்தக சோழன் என்று அழைக்கப்பட்டவர் - சுந்திர சோழன்

💠  இரண்டாம் பராந்தகன் சோழன் மகன் - முதலாம் இராஜராஜ சோழன்

💠 முதலாம் இராஜராஜ சோழன் பட்டப்பெயர்கள் -
 *மும்முடிச் சோழன்
* அருள்மொழி வர்மன்
* இராஜகேசரி
* காந்தளூர் சாலை கலமருதருளியவன்
* சிவபாத சேகரன்
* உலகலந்தான்
* ஜெயங்கொண்டம்

💠 முதலாம் இராஜராஜ சோழனால் தோற்கடிக்க பட்ட சேர மன்னன் - பாஸ்கர வர்மன்

💠 முதலாம் இராஜராஜ சோழன் தோற்கடிக்க பட்ட பாண்டிய அரசன் - அமரபுஜங்கன்

💠 முதலாம் இராஜராஜ சோழன் தோற்கடிக்க பட்ட இலங்கை அரசன் - ஐந்தாம் மகிந்தன்

💠முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையில் நிர்மாணித்த நகரம் - புலனருவா

💠 நில அளவு முறையை அறிமுக படுத்தியவர் - முதலாம் இராஜராஜ சோழன்

💠 முதலாம் இராஜராஜ சோழன் புத்த ஆலயம் கட்ட நன்கொடை அளித்த இடம் - ஆனைமங்கலம்

💠 முதலாம் இராஜராஜ சோழன் கட்டிய கோயில் - தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்

💠 முதலாம் இராஜராஜ சோழன் மகன் - முதலாம் இராஜேந்திர சோழன்

💠 முதலாம் இராஜேந்திர சோழன் பட்டப்பெயர்
* கங்கை கொண்டான்
* கடாரம் கொண்டான்
* முடி கொண்டான்
* உத்தம சோழன்
* பண்டித சோழன்

💠 முதலாம் இராஜேந்திர சோழனால் தோற்கடிக்க பட்ட வங்கால அரசர் - மகிபாலர்

💠 முதலாம் இராஜேந்திர சோழன் தலைநகரை தஞ்சையில் இருந்து எங்கு மாற்றினார் - கங்கை கொண்ட சோழபுரம்

💠 கடாரம் நாடுகள் என்பது - மலேசிய, ஜாவா, சுமத்ரா

💠 முதலாம் இராஜேந்திர சோழன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் குலோத்துங்க சோழன்

💠 முதலாம் குலோத்துங்க சோழன் பட்டப்பெயர் - சுங்கம் தவிர்த்த சோழன்

💠 குடைவோலை முறையை பற்றி கூறும் கல்வெட்டு - உத்திரமேரூர் கல்வெட்டு

💠 குடைவோலை முறையில் தேர்தெடுக்கும் வயது - 35 முதல் 70 வரை

💠 சோழர் காலத்தில் இருந்த வாரியங்கள் - 7

1. சம்பட்சாரா வாரியம் - நிர்வாகம், பொதுவான வளர்ச்சி - 12 பேர்
2. தோட்ட வாரியம் - வேளாண்மை, மரம் வளர்ப்பு - 12 பேர்
3. ஏரி வாரியம் - நீர் வளம் - 6 பேர்
4. கழனி வாரியம் - வயல் வளம் - 6 பேர்
5. கணக்கு வாரியம் - நிதி நிலை - 6 பேர்
6. தடவழி வாரியம் - போக்குவரத்து - 6 பேர்
7. பஞ்சவாரா வாரியம் - வளர்ச்சி பணிகள் மேம்பாடு - 6 பேர்

💠 சோழர்கள் நிர்வாகம் பற்றி நூல் எழுதிய வரலாற்று ஆசிரியர் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

💠 சோழ பேரரசு மாகாணங்கள் - 9

💠 சோழர் காலத்தில் இசைக்கு உபயோகித்த பண்கள் - 23



விஜயநகர பேரரசு பற்றிய சில தகவல்கள் :-

💠 விஜயநகர பேரரசை தோற்றுவித்தவர் - அரிஅரர், புக்கர்

💠 விஜயநகர பேரரசு தோற்றுவித்தப்பட்ட ஆண்டு - 1336

💠 விஜயநகர பேரரசு தோற்றிவிக்க காரணமானவர் - வித்யாரண்யர்

💠 விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட இடம் - துங்கபத்ரா தென் நதி கரை

💠 விஜயநகர மரபுகள் மொத்த - 4
1. சங்கம
2. சாளுவ
3. துளுவ
4. ஆரவீடு

💠 விஜயநகர பேரரசு வருகை புரிந்த இத்தாலி நாட்டு பயணி - நிக்கோலோ கேண்டி

💠 பாரசீக நாட்டு பயணி - அப்துல் ரசாக்

💠 விஜயநகர பேரரசின் சிறந்த அரசர் - கிருஷ்ண தேவராயர்

💠 கிருஷ்ண தேவராயர் சார்ந்த மரபு - துளுவ

💠 கிருஷ்ண தேவராயர் கடைசி வெற்றி யாரை தோற்கடித்தது - இசுமாயில் அதில்ஷா

💠 கிருஷ்ண தேவராயர் எந்த நாட்டுடன் வியாபாரம் உறவு வைத்திருந்தார் - போர்த்துக்கீசர்

💠 கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்த புலவர்களை எவ்வாறு அழைத்தனர் - அஷ்டதிக்கஜங்கள் (8)

💠 கிருஷ்ண தேவராயர் இயற்றிய சமஸ்கிருத நூல் - உஷா பரிணயம், ஜாம்பவதி கல்யாணம்

💠 கிருஷ்ண தேவராயர் இயற்றிய தெலுங்கு நூல் - ஆமுக்த மால்யதம்

💠 கிருஷ்ண தேவராயர் தனது பட்டத்தரசி நினைவாக அமைந்த நகரம் - நாகலாபுரம்

💠  கிருஷ்ண தேவராயர் அவையில் இருந்த நகைச்சுவை கவிஞர் - தெனாலிராமன்

💠 அல்லசானி பெத்தன்னா இயற்றிய தெலுங்கு நூல் - மனுசரிதம், ஹரிகதாசரம்

💠 ஆந்திரகவிதாபிதாமகர் என்று அழைக்கப்படுபவர் - அல்லசானி பெத்தன்னா

💠 ஆந்திரா காளிதாசர் என்று அழைக்கப்படுபவர் - அல்லூரி குப்பன்னா

💠 கிருஷ்ண தேவராயர் புதுப்பித்த கோயில்கள் - விருபாட்சிபுரம் கோயில், அசாரா இராமசாமி கோயில்

💠 விஜயநகர அரசின் சிதைவுகள் காணப்படும் இடம் - ஹம்பி

💠 விஜயநகர அரசின் துளுவ வம்சம் கடைசி அரசர் - சதாசிவ ராயர்

💠 சதாசிவ ராயரை சிறை வைத்தவர் - ராம ராயர்

💠  சதாசிவ ராயரின் அமைச்சர் - ராம ராயர்

💠 விஜயநகர அரசின் கடைசி அரசன் - இரண்டாம் ஸ்ரீரங்கர்



பாமினி சுல்தான்கள் பற்றிய சில தகவல்கள்:-

💠 பாமினி சுல்தான் மரபு தோற்றுவித்தவர் - அலாவுதீன் அசன் பாமன்ஷா

💠 அலாவுதீன் அசன் பாமன்ஷா வேறு பெயர் - ஹசன் கங்கு

💠 இவர்களின் தலைநகரம் - குல்பர்கா (கர்நாடகம்)

💠 அலாவுதீன் அசன் பாமன்ஷா மகன் - முகமது ஷா

💠 முகமது ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் முகமது ஷா

💠 இரண்டாம் முகமது ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - பெரோஸ் ஷா

💠 பெரோஸ் ஷா சகோதரர் பெயர் - அகமது ஷா

💠 குல்பர்கா வில் இருந்து பீடாருக்கு மாற்றியவர் - அகமது ஷா

💠 பாமினி சுல்தான்களின் தலைசிறந்த அரசர் - மூன்றாம் முகமது

💠 மூன்றாம் முகமது படைதளபதி - முகமது கவான்

💠 தன் செல்வங்கள் எல்லாம் செலவழித்து பீடாரில் கல்லூரி கட்டியவர் - முகமது கவான்

💠  முகமது கவான் இறப்பிற்கு பின் பாமினி சுல்தான் எத்தனை பிரிவுகளாக பிரிந்த்து - 5
1. பீரார்
2. பீடார்
3. பீஜப்பூர்
4. அகமது நகர்
5. கோல்கொண்டா

💠பாமினி சுல்தான் கட்டிடங்கள் கட்ட அமைந்த பாணி - பாரசீக பாணி

💠 உலகில் காணப்படும் மிகப்பெரிய கவிகை மடம் - கோல்கும்பாஸ்

💠 பாமினி சுல்தான் ஆட்சி மொழி - உருது

💠 உருது தொன்ற அடிப்படையாக அமைந்த மொழி - இந்தி, அரேபிய, பாரசீகம்

💠 தலைகோட்டை போர் - 1565 (பாமினி சுல்தான் Vs விஜயநகர பேரரசு)

💠 தலைகோட்டை போரில் பங்கு கொல்லாத பாமினி அரசு - பீரார்

💠 பாமினி சுல்தான் கடைசி அரசர் - மூன்றாம் முகமது



 லோடி மரபு பற்றிய சில தகவல்கள் :-

💠 லோடி மரபு தோற்றுவித்தவர் - பஹ்லுல் லோடி

💠 பஹ்லுல் லோடி மகன் - சிக்கந்தர் லோடி

💠 லோடி வம்சத்தில் சிறந்த அரசர் - சிக்கந்தர் லோடி

💠 டெல்லியில் இருந்து தலைநகரை ஆக்ராவிற்கு மாற்றியவர் - சிக்கந்தர் லோடி

💠 சிக்கந்தர் லோடி மகன் - இப்ராஹிம் லோடி

💠 சிக்கந்தர் லோடி படைதளபதி - தௌலத்கான் லோடி

💠 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு அழைப்பு விடுத்தவர் -  தௌலத்கான் லோடி

💠 பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும் ஏற்பட்ட போர் - முதலாம் பானிபட் போர் (1526)

💠 லோடி வம்சம் ஆட்சி செய்த ஆண்டு - 75 ஆண்டுகள்



சையது மரபு பற்றிய சில தகவல்கள் :-

💠 சையது மரபு தோற்றி வித்தவர் - கிசிர்கான்

💠 கிசிர்கான் தலைநகரம் - டெல்லி

💠 கிசிர்கான் பின் ஆட்சிக்கு வந்தவர் - முபாரக் ஷா

💠 முபாரக் ஷா பின் ஆட்சிக்கு வந்தவர் - முகம்மது ஷா

💠 முகம்மது ஷா அமைச்சர் - பஹ்லுல் லோடி

💠 சையது மரபின் கடைசி அரசர் - முகம்மது ஷா



 துக்ளக் மரபு பற்றிய சில தகவல்கள்:-

💠 துக்ளக் மரபு தோற்றுவித்தவர் - கியாசுதின் துக்ளக்

💠 கியாசுதின் துக்ளக் தந்தை வழி மரபு - துருக்கி

💠 கியாசுதின் துக்ளக் தாய் வழி மரபு - பாஞ்சாப் (ஜாட்) வகுப்பு

💠 கியாசுதின் துக்ளக் மகன் பெயர் - முகமது பின் துக்ளக்

💠 சிறந்த கல்விமான் னாக திகழ்ந்தவர் - முகம்மது பின் துக்ளக்

💠 முகம்மது பின் துக்ளக் காலத்தில் இருந்த சரித்திர ஆசிரியர் - பரணி

💠 முகம்மது பின் துக்ளக் காலத்தில் வந்த மொராக்கோ நாட்டுப் பயணி - இபின் பட்டுடா

💠 இரு நதிகளுக்கு இடைப்பட்ட வளமான பகுதி - தோவாப்

💠 தன் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றியவர் - முகம்மது பின் துக்ளக்

💠 தேவகிரிக்கு முகம்மது பின் துக்ளக் வைத்த பெயர் - தௌலதாபாத்

💠 அடையாள செப்பு நாணயங்களை வெளியிட்டவர் - முகம்மது பின் துக்ளக்

💠 முகம்மது பின் துக்ளக் எடுத்த இரு படையெடுப்பு -
1. பாரசீக
2. குமோன் - இரண்டும் படு தொல்லை

💠 முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று அழைக்கப்படுபவர் - முகம்மது பின் துக்ளக்

💠 முகம்மது பின் துக்ளக் பின் ஆட்சிக்கு வந்தவர் - பெரோஸ் துக்ளக்

💠 கியாசுதின் இளைய சகோதரர் - பெரோஸ் துக்ளக்

💠 துக்ளக் மரபில் சிறந்த அரசர் - பெரோஸ் துக்ளக்

💠 ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு (Employment Bureau) முறையை அறிமுகம் படுத்தியவர் - பெரோஸ் துக்ளக்

💠 பெரோஸ் துக்ளக் நிர்மாணித்த நகரங்கள் - பெரோஷபாத், ஜான்பூர், இஸ்சார், பெரோஷ்பூர்

💠 துகளக் மரபு சிதறுண்டு போக காரணம் - தைமூர் படையெடுப்பு

💠 பெரோஸ் துக்ளக் அமைந்த பூந்தோட்டங்கள் - 1200

💠 துக்ளக் மரபு கடைசி அரசர் - பெரோஸ் துக்ளக்



கில்ஜி மரபு பற்றிய சில தகவல்கள்:-

💠 கில்ஜி மரபு தோற்றுவித்தவர் - ஜலாலுதீன் கில்ஜி

💠 ஜலாலுதீன் கில்ஜி அறியனை ஏறும் போது வயது - 70

💠 ஜலாலுதீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - அலாவுதீன் கில்ஜி

💠 ஜலாலுதீன் கில்ஜி யாரால் கொல்லப்பட்டார் - அலாவுத்தீன் கில்ஜி

💠 ஜலாலுதீன் கில்ஜி மருமகன் - அலாவுத்தீன் கில்ஜி

💠 கில்ஜி வம்சத்தின் தலைசிறந்த அரசர் - அலாவுத்தீன் கில்ஜி

💠 அலாவுத்தீன் கில்ஜி குஜராத் மீது படையெடுத்து ஆண்டு - கி.பி. 1297

💠 குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி - மாலிக்காபூர்

💠 அலாவுத்தீன் கில்ஜி யால் தோற்கடிக்கப்பட்ட மோவர் அரசர் - ராணபீம்சிங்

💠 ராணபீம்சிங் மனைவி பெயர் - ராணி பத்மினி

💠 ராணி பத்மினி தன் கணவர் இறப்பிற்கு பின் எவ்வாறு இறந்தார் - ஜவகர் முறை

💠 ஜவகர் என்பது - தீக்குளித்து உயிர் விடுவது

💠 தென்னிந்திய வரை படையெடுத்து வந்த அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி - மாலிக்காபூர்

💠 மாலிக்காபூர் தென்னிந்தியாவில் எந்த பகுதி வரை படையெத்து வந்தார் - இராமேஸ்வரம்

💠 அசோகருக்கு பின் மிக பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் - அலாவுத்தீன் கில்ஜி

💠 குதிரைக்கு சூடு போடும் முறைக்கு பெயர் - தாக்

💠 தாக் முறை அறிமுக படுத்தியவர் - அலாவுத்தீன் கில்ஜி

💠 அலாவுத்தீன் கில்ஜி நிர்மானித்த நகரம் - சிரி

💠 அலாவுத்தீன் கில்ஜியால் ஆதரிக்கப்பட்ட பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு

💠 அமீர் குஸ்ரு எழுதிய நூல் - லைலா மஜ்னு

💠 அமீர் குஸ்ரு கண்டுபிடித்த இசை கருவி - ஷெனாய்

💠 அலாவுத்தீன் கில்ஜி இறப்பு - கி.பி. 1316

💠 அலாவுத்தீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - குத்புதின் முபாரக்

💠 கில்ஜி வம்சத்தின் கடைசி அரசர் - குத்புதின் முபாரக்



அடிமை மரபு பற்றிய சில தகவல்கள்:-

💠 அடிமை மரபு தோற்றுவித்தவர் - குத்புதின் ஐபாக்

💠 அடிமை என்பதற்கு வேறு பெயர் - மம்லுக்

💠 குத்புதின் ஐபாக் யாருடைய அடிமை - முகமது கோரி

💠 குத்புதின் ஐபாக் டெல்லியில் கட்டிய மசூதியின் பெயர் - க்யூவாட் உல் இஸ்லாம்

💠 குத்புதின் ஐபாக் எவ்வாறு அழைக்கப்பட்டார் - லக்பாக்க்ஷா

💠 லக்பாக்க்ஷா என்பதன் பொருள் - லச்சங்களை அள்ளி தருபவர்

💠 குத்புதின் ஐபாக் டெல்லியில் கட்டிய புகழ் பெற்ற கட்டிடம் - குதுப்மினார்

💠 குத்புதின் ஐபாக் எவ்வாறு இறந்து போனார் - போலோ விளையாட்டில் போது

💠 போலோ விளையாட்டிற்கு வேறு பெயர் - சவ்கன்

💠 குத்புதின் ஐபாக் பின் ஆட்சிக்கு வந்தவர் - இல்துமிஷ்

💠 குத்புதின் ஐபாக் மருமகன் - இல்துமிஷ்

💠 குத்புதின் ஐபாக் மகன் - அராம்

💠 இல்துமிஷ் வெளியிட்ட வெள்ளி நாணயம் பெயர் - டாங்கா

💠 குதுப்மினார் கட்டி முடித்தவர் - இல்துமிஷ்

💠 இல்துமிஷ்  மகள் பெயர் - இரசிய சுல்தான்

💠 இல்துமிஷ்  பின் ஆட்சிக்கு வந்தவர் - இரசிய சுல்தான்

💠 டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் - இரசிய சுல்தான்

💠 இரசிய சுல்தான் கணவர் பெயர் - அல்துணியா

💠 இரசிய சுல்தான் பின் ஆட்சிக்கு வந்தவர் - நஸ்ருதீன் முகமது

💠 இல்துமிஷ் கடைசி மகன் - நஸ்ருதீன் முகமது

💠 நஸ்ருதீன் முகமது முக்கிய ஆலோசகர் - கியாசுதின் பால்பன்

💠 நஸ்ருதீன் முகமது பின் ஆட்சிக்கு வந்தவர் - கியாசுதின் பால்பன்

💠 அடிமை வம்சத்தின் சிறந்த அரசர் - கியாசுதின் பால்பன்

💠 40 துருக்கிய பிரபுக்களை ஒழித்தவர் - கியாசுதின் பால்பன்

💠 கியாசுதின் பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு

💠 இந்துஸ்தான் கிளி என்று அழைக்கப்படுபவர் - அமீர் குஸ்ரு

💠 கியாசுதின் பால்பனால் தோற்கடிக்கப்பட்ட வங்காள ஆளுநர் - துக்ரில்கான்

💠 கியாசுதின் பால்பன் பின் ஆட்சிக்கு வந்தவர் - கைகுபாத்

💠 அடிமை மரபின் கடைசி அரசர் - கைகுபாத்



முதல் பாண்டிய பேரசு பற்றி சில தகவல்கள்:-

💠 முதல் பாண்டிய பேரரசு தோற்றுவித்தவர் - கடுங்கோன்

💠 களப்பிரர்களிடம் இருந்து தென்தமிழகத்தை மீட்டவர் - கடுங்கோன்

💠 கடுங்கோன் பின் ஆட்சிக்கு வந்தவர் - மாறவர்மன் அவனி சூளாமணி

💠 மாறவர்மன் அவனி சூளாமணி பட்டப்பெயர் - சடையவர்மன், உண்மையின் தோழன்

💠 மாறவர்மன் அவனி சூளாமணி பின் ஆட்சிக்கு வந்தவர் - செழியன் சேந்தன்

💠 செழியன் சேந்தன் எவ்வாறு அழைக்கப்பட்டான் - வானவன்

💠செழியன் சேந்தன் பட்டப்பெயர் - செங்கோற்சேந்தன், வேந்தர் வேந்தன்

💠 மலையடிக்குறிச்சியில் குகை கோயில் கட்டியவர் - செழியன் சேந்தன்

💠 செழியன் சேந்தன் பின் ஆட்சிக்கு வந்தவர் - மாறவர்மன் அரிகேசரி

💠 மாறவர்மன் அரிகேசரி பட்டப்பெயர் - பராங்குசன், நெய்வேலி வென்ற நெடுமாறன்

💠 மாறவர்மன் அரிகேசரி முதலில் பின்பற்றிய சமயம் - சமண சமயம்

💠 மாறவர்மன் அரிகேசரி யாருடைய அருளினால் சைவ சமயத்திற்கு மாறினார் - திருஞானசம்பந்தர்

💠 மாறவர்மன் அரிகேசரி சைவ சமயத்திற்கு மாறிய பின் வழங்கப்பட்ட பட்டப்பெயர் - கூண் பாண்டியன், நின்றசீர் நெடுமாறன்

💠 மாறவர்மன் அரிகேசரி சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறியதை பற்றி கூறும் நூல் - பெரியபுராணம்

💠 மாறவர்மன் அரிகேசரி பின் ஆட்சிக்கு வந்தவர் - கோச்சடையான் இரணதீரன்

💠 கோச்சடையான் இரணதீரன் வழங்கப்பட்ட பட்டப்பெயர்கள் - மன்னர்மன்னன், கொங்கர் கோமான், வானவன் செம்பியன், மதுரை கருநாடகன்

💠 கோச்சடையான் இரணதீரன் காலத்தில் மதுரைக்கு வருகை புரிந்தவர் - சுந்தரமூர்த்தி நாயனார்

💠 முதல் பாண்டிய பேரரசின் கடைசி அரசர் - வீரபாண்டியன்

💠 பாண்டியர்கள் காலத்தில் கல்வி கூடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது - சாலைகள்



இரண்டாம் பாண்டிய பேரரசு பற்றிய சில தகவல்கள் :-

💠 இரண்டாம் பாண்டிய பேரரசின் தலைநகரம் - மதுரை

💠 இரண்டாம் பாண்டிய அரசின் முதல் அரசர் - முதலாம் ஜடாவர்மன் குலசேகரன்

💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் யாருடைய மகன் - விக்ரமன்

💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் எந்த சோழ மன்னனிடம் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார் - மூன்றாம் குலோத்துங்கன்

💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் பட்டப்பெயர் - ராஜகம்பீரர்

💠 சதுர்வேதி மங்கலத்தில் 1030 பிரம்ம தேயங்கள் அமைத்தவர் - முதலாம் ஜடாவர்மன் குலசேகரன்

💠 முதலாம் ஜடாவர்மன் குலசேகரன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்

💠 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பட்டப்பெயர் -
* கலியுகராமன்
* அதிசய பாண்டிய தேவர்
* சோனாடு கொண்டான்

💠 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் ஜடாவர்மன் குலசேகரன்

💠 இரண்டாம் ஜடாவர்மன் குலசேகரன் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன்

💠 இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனை தோற்கடித்த சோழ அரசன் - மூன்றாம் இராஜேந்திரன்

💠 இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்

💠 முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பட்டப்பெயர்
* திரிபுவன சக்கரவர்த்தி
* எம்மண்டலமும் கொண்டருளிய பாண்டியன்
* பொன்வேய்ந்த பெருமாள்

💠 முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் பின் ஆட்சிக்கு வந்தவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

💠 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பட்டப்பெயர் - கொல்லம் கொண்ட பாண்டியன்

💠 இலங்கைக்கு சென்று புத்தர் பல்லை எடுத்து வந்தவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

💠 நெல்லையப்பர் கோயில் சுற்றுசுவர் கட்டியவர் - முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

💠 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கொங்கு நாட்டு ஆளுநராக யாரை நியமித்தார் - சுந்தர பாண்டியன்

💠 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் செங்கல்பட்டு ஆளுநராக யாரை நியமித்தார் - விக்கிரம பாண்டியன்

💠 சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன் பகையை தீர்த்து வைத்தவர் - மாலிக்காபூர்

💠 பாண்டியர் காலத்தில் நாணயத்தில் பொறிக்கப்பட்ட உருவம் - மீன்

💠 தமிழ் கூடல் என்று அழைக்கப்படும் நகரம் - மதுரை



சங்க காலம் மரபு பற்றி சில தகவல்கள்:-

🎯 தமிழகத்தில் பொற்காலம் என்று அழைக்கப்படுவது - சங்க காலம்

🎯 சங்க காலத்தில் காலம் - கி.மு. 3ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம் நூற்றாண்டு

🎯 சங்கம் என்ற சொல்லுக்கு பொருள் - கழகம்

🎯 சங்க காலத்தில் இயற்றிய நூல் - தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

🎯 சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்டது - பதினெண் கீழ் கணக்கு நூல்கள்

🎯 சங்க காலத்தில் ஆட்சி செய்த அரசுகள் - சேரர், சோழர், பாண்டியர்

💠சேரர்:

🎯 சேரர் தலைநகரம் - வஞ்சி

🎯 சேரர் துறைமுகம் - தொண்டி

🎯  சேரர் சின்னம் - வில் அம்பு

🎯 சேரர் சிறந்த அரசர் - சேரன் செங்குட்டுவன்

🎯 சேரர் அடையாள பூ - பனா பூ

🎯 சேரர்களை எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் - வானவர், வில்லவர், மலையர்

🎯சேரர்களின் மரபுகள் -2 (1. உதயன் சேரலாதன் மரபு, 2. இரும்பொறை மரபு)

🎯 சேரன் செங்குட்டுவன் இளவல் - இளங்கோவடிகள்

🎯 சேரர் தற்கால பகுதி - கேரளா

🎯 இமயம் வரை படையெத்த சேர மன்னன் - சேர செங்குட்டுவன்

💠சோழர்:-

🎯 சோழர் தலைநகரம் - புகார்

🎯 சோழர் துறைமுகம் -
 காவிரிபூம்பட்டினம்  (பூம்புகார்)

🎯 சோழர் சின்னம் - புலி

🎯 சோழர் அடையாள பூ - ஆத்தி பூ

🎯 சோழர் சிறந்த அரசர் - கரிகாலன் சோழன்

🎯 சோழர்களை எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் - கிள்ளி, வளவன், சென்னி

🎯 கரிகாலன் சோழன்  பற்றி கூறும் நூல் - பட்டினப் பாலை, பொருநராற்றுப்படை

🎯 கரிகாலன் சோழன் அவைப்புலவர் - உரித்திரகண்ணனார்

🎯  கரிகாலன் சோழன்  இயற்பெயர் - திருமாவளவன்

🎯 கரிகாலன் சோழன்  பட்டப் பெயர் - ஏழிசை வல்லவன், நரை முடித்து சொல்லால் முறை செய்தவன்

🎯 கரிகாலன் சோழன்  கட்டிய அணை - கல்லணை

🎯 சோழர் ஆட்சி காலத்தில் இருந்த கடைசி அரசர் - கோச்செங்கணான்

💠பாண்டியர்:-

🎯 பாண்டியர் தலைநகரம் - மதுரை

🎯 பாண்டியர் துறைமுகம் - கொற்கை (தூத்துக்குடி)

🎯 பாண்டியர் சின்னம் - மீன்

🎯 பாண்டியர் அடையாள பூ - வேம்பு

🎯 பாண்டியர் சிறந்த அரசர் - தலையாலங்காலத்து செருவென்ற நெடுஞ்செழியன்

🎯 பாண்டியர்கள் வேறு பெயர்கள் - மாறன், வழுதி, செழியன்

🎯 பல்யாக சாலை என்று போற்றப்படுபவர் - முதுகுடுமிப் பெருவழுதி

🎯 தலையாலங்காலத்து செருவென்ற நெடுஞ்செழியன் பற்றி கூறும் நூல் - மதுரை காஞ்சி

🎯 கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டிய மன்னன் - ஆரிய படைகடந்த நெடுஞ்செழிய பாண்டியன்

No comments:

Post a Comment