Monday, June 26, 2017

சாகித்ய அகாடமி விருது

#சாகித்ய அகாடமி விருது வாங்கிய தமிழ் இலக்கியங்கள்:

1955 - தமிழ் இன்பம் - ரா. பி. சேதுப்பிள்ளை (#சேது-க்கு தன் பிள்ளையை பார்த்ததும் இன்பம் தாங்க முடியல)

1956 - அலை ஓசை - கல்கி கிருஷ்ணமூர்த்தி (#அலை கல்-ல பட்டா ஓசை வரும் )

1958 - சக்கரவர்த்தித் திருமகன் - சி. ராஜகோபாலச்சாரி (#ராஜா - சக்கரவர்த்தி)

1961 - அகல் விளக்கு - மு.வரதராசனார் (#தேர்வுல முன்னாடி வரனும்னா கரண்ட் போனாலும் விளக்கு வைச்சி படிக்கனும்)

1962 - அக்கரைச்சீமை - சோமு (#கறை பட்டா சோப்புப் போடனும் )

1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (#வேங்கையின் மைந்தன் அகிலத்தை ஆண்டவன்)

1965 - ஸ்ரீ ராமானுஜர்  - பி. ஸ்ரீ ஆச்சார்யா (#ராமானுஜர் ஆச்சாரியரா இருந்தாரு)

1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - ம. பொ. சிவஞானம் (#வள்ளலார கண்டா ஞானம் கிடைக்கும் )

1967 - வீரர் உலகம் - கி. வா. ஜகன்னாதன்(#ஜகரத்தன் மஹாபாரதத்தில வரும் சிறந்த வீரன்)

1968 - வெள்ளைப் பறவை - அ. சீனிவாச ராகவன் (#சீனி வெள்ளை தநிறமா இருக்கும்)

1969 - பிசிராந்தையார் - பாரதிதாசன்

1970 - அன்பளிப்பு - கு. அழகிரிசாமி(#அழகா இருக்குறவங்கள பார்த்தா அன்பளிப்பு கொடுக்கத் தோனும்)

1971 - சமுதாய வீதி  - நா. பார்த்தசாரதி (#சமுதாய வீதி-ல போறப்போ எல்லாரையும் பார்த்துட்டே போவோம்)

1972 - சில நேரங்களில் சில மனிதர்கள்  - ஜெயகாந்தன் (#சில மனிதர்களுக்கு சில நல்ல நேரங்களில் தான் ஜெயம் கிடைக்கும்)

1973 - வேருக்கு நீர்- ராஜம் கிருஷ்ணன் (#வேருக்கு நீர் ஊத்தனும்-னு கிருஷ்ணர் சொன்னார்)

1974 - திருக்குறள் நீதி இலக்கியம்- கே. டி. திருநாவுக்கரசு (திரு - திரு)

1975 - தற்கால தமிழ் இலக்கியம்  - ஆர். தண்டாயுதம் (#இந்த கலி காலத்தில தமிழ் இலக்கியம் இயற்றினா தண்டனை கொடுப்பாங்க)

1977 - குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி (#இரத்தம் வர்றத இந்திரா பார்த்துட்டாங்க)

1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்(#வள்ளி முருகருக்கு புதுக்கவிதை அனுப்புனாங்க)

1979 - சக்தி வைத்தியம்  - தி. ஜானகிராமன் (#எம்.ஜி.ஆர் மனைவி சக்தி வைத்தியம் பார்த்தாங்க)

1980 - சேரமான் காதலி - கண்ணதாசன்

1981 - புதிய உரைநடை - மா. ராமலிங்கம்(#ராமலிங்க வள்ளலார் புதிய உரைநடையை புகுத்தினார்)

1982 - மணிக்கொடி காலம் - பி. எஸ். ராமையா(#மணிரத்னம் படம் இரவில் (ரா) தான் இருக்கும்)

1983 - பாரதி : காலமும் கருத்தும்  - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி (#காவிரி மூன்று புறமும் பாயும் )

1985 - கம்பன் : புதிய பார்வை -அ. ச. ஞானசம்பந்தன்(#ஞானம் கிடைச்சா மட்டுமே கம்பன புதிய பார்வையில பார்க்க முடியும்)

1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம் - க. நா. சுப்பிரமணியம்(#நடப்பு-கல்விக் கொள்கை பற்றி ஆராய சுப்பிரமணியம் தலைமையில் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்குழு இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் வேணும்னு பரிந்துரை செய்தது)

1987 - முதலில் இரவு வரும் - ஆதவன் (#முதலில் இரவு வரும் அப்புறம் சூரியன்வரும் )

1988 - வாழும் வள்ளுவம் - வா. செ. குழந்தைசாமி (#குழந்தை ஒரு வாழும் பருவம் )

1989 - சிந்தாநதி - லா. ச. ராமாமிர்தம்(#அமிர்தம் வாங்கும்போது சிந்தாம வாங்கனும் )

1990 - வேரில் பழுத்த பலா - சு. சமுத்திரம்(#ஆறுகள் கூடுமிடத்தில பலா வச்சா வேர்லயே பழுக்கும்)

1991 - கோபல்ல கிராமத்து மக்கள் - கி. ராஜநாராயணன் (#கோபல்ல கிராமத்த ஆட்சி செய்த ராஜா எப்பவும் நாராயணா னு சொல்லிட்டே இருப்பாரு)

1992 - குற்றாலக் குறிஞ்சி - கோவி. மணிசேகரன்(#குற்றாலத்துக்கு குளிக்க போனா #துணிமணி ய குறங்கு தூக்கிட்டு போயிடும்)

1993 - காதுகள் - எம். வி. வெங்கட்ராம் (#வெங்கட்ராமா னு சொல்ற மந்திரத்தை   காதுல வாங்கிக்கிட்டா நல்லது)

1994 - புதிய தரிசனங்கள் - பொன்னீலன் (#பொன்னி அரிசி ஒரு புதிய தரிசனம் மாதிரி)

1995 - வானம் வசப்படும்  - பிரபஞ்சன்(#வானம் வசப்பட வைக்கனும்னா பிரபஞ்சத்தையே ஆள வேண்டும்)

1996- அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்ரன் (அப்பாவுக்கு அசோகன் நடிப்பு பிடிக்கும்)

1997 - சாய்வு நாற்காலி- தோப்பில் முகமது மீரான் (#தோப்புல சாய்வு நாற்காலி கிடக்கும்)

1998 - விசாரணைக் கமிஷன் - சா. கந்தசாமி (#கந்தசாமி படத்துல விக்ரம்-க்கு விசாரணை கமிஷன் வச்சாங்க)

1999 - ஆலாபனை - அப்துல் ரகுமான்(ஏ.ஆர்.ரகுமான் #ஆராமலே னு பாட்டு படிக்கிறார்)

2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் - தி. க. சிவசங்கரன் (#நடிகர் சிவசங்கர் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே நிறைய விமர்சனங்கள் பேட்டிகள பார்த்தவரு)

2001 - சுதந்திர தாகம்  - சி. சு. செல்லப்பா(#தாகம் எடுத்தா அப்பாக்கிட்ட சொல்லனும்)

2002 - ஒரு கிராமத்து நதி- சிற்பி பாலசுப்ரமணியம்
2003 - கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
2004 - வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
(#ஒரு கிராமத்து நதியில சிற்பி கிடக்குது இத காட்டுல பார்த்த வைரமுத்து இதிகாசம் எழுதலாம்னு வள்ளுவருக்கு வணக்கம் போட்டுட்டு ஈரோடு-ல எழுதினார்)

2005 - கல்மரம் - ஜி. திலகவதி (#திலகவதி IPS-க்கு கல்மனசு)

2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு.மேத்தா (#மோட்சம் கிடைத்தால் ஆகாயத்துக்கு அடுத்த வீடு தான்)

2007 - இலையுதிர் காலம் - நீல. பத்மநாபன் (#இலையுதிர் காலத்தில இலை பட்டுப்போய் நீல கலர்-ல மாறிடும்)

2008 - மின்சாரப்பூ - மேலாண்மை பொன்னுசாமி (#மின்சாரத்தில பூ கண்டுபிடிச்சதால பொன்னுச்சாமிக்கு மேலாண்மை விருது கொடுத்தாங்க)

2009 - கையொப்பம்  - புவியரசு (#கையொப்பம் புவி முழுவதும் போனாதான் அரசாள முடியும்)

2010 - சூடிய பூ சூடற்க  - நாஞ்சில் நாடன்(#நாஞ்சில் நாட்டில தான் பூ சூடுறமாதிரி நல்ல பூ கிடைக்கும்)

2011 - காவல் கோட்டம்- சு. வெங்கடேசன்(#திருப்பதி வெங்கடாச்சலம் மக்களுக்கு காவல் தெய்வமா இருக்கிறாரு)

2012 - தோல் - டி. செல்வராஜ் (#தோல் செல்களால் ஆனது)

2013 - கொற்கை- ஜோ டி குரூஸ்(#கொற்கை துறைமுகத்துல முத்துக்கள் ஜோடி ஜோடி யா கிடைச்சிது)

2014 - அஞ்ஞாடி - பூமணி(ஜாடி ல பூ வைக்கனும்)

No comments:

Post a Comment