Thursday, January 11, 2018

ISRO தலைவர்



விஞ்ஞானி கே.சிவன் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கைலாசவடிவு நாடார், தாயார் செல்லம். சரக்கல்விளை அரசு தொடக்கபள்ளியில் சிவன் ஆரம்ப கல்வி பயின்றார். வல்லன்குமாரவிளை அரசு உயர்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு வரை படித்தார்.

கன்னியாகுமரி: அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து இன்று இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் தமிழக விஞ்ஞானி டாக்டர் கே சிவன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை கிராம மக்களும், விஞ்ஞானின் சிவனின் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விஞ்ஞானி டாக்டர் கே சிவனின் சொந்த ஊர் மக்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ் வழியில் படித்து இன்றைக்கு மிகப்பெரிய பதவிக்கு வந்து ஊருக்கே பெருமை சேர்த்துள்ளார். அவர் அரசு பள்ளியில் படித்தாலும் சிறு வயதில் இருந்தே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார். கணக்கில் புலியாக இருப்பார் என்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment