Saturday, January 27, 2018

தமிழ்

01.   தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி

02.   தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்

03.   தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது
-திரணதூமாக்கினியார்

04.   தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின்  தந்தை
– சமதக்கினி

05.   தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்
– தெய்வச்சிலையார்

06.   தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்

07.   தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்

08.   தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்

09.   தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்
– குறிஞ்சிப்பாட்டு

10.   தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி

11.   நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்

12.   நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு

13.   நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்

14.   நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு –  கி.பி.880

15.   நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்

16.   நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்

17.   நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்

18.   நம்பியகப் பொருள் எழுதியவர் -         நாற்கவிராச நம்பி

19.   நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்

20.   நமர்  - ஒற்றர்

21.   நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்

22.   நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின்
– நரிவெரூவுத்தலையார்
– புறநானூறு

23.   நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு

24.   நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்

25.   நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் –
நவநீத நடனார்

26.   நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்

27.   நளவெண்பா காண்டங்கள் – 3

28.   நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்

29.   நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்

30.   நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்

31.   நற்றிணை அடி வரையறை – 9 - 12

32.   நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்

33.   நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3 
{ அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ }

34.   நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,

35.   வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்

36.   நற்றிணையில் அமைந்த பாடல்கள்  - 400

37.   நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7

38.   நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்

39.   நற்றிணையின் பாவகை – அகவற்பா

40.   நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்

41.   நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்

42.   நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி

43.   நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175

44.   நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை - 192

45.   நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை

46.   நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்

47.   நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்

48.   நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்

49.   நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு

50.   நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32

No comments:

Post a Comment