Friday, September 19, 2025
மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான்
Wednesday, August 20, 2025
50 Government Services by Whatsapp / *வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள்*
Wednesday, November 15, 2023
கந்த சஷ்டி கவசம் / Kantha Sasti Kavasam
Thursday, March 9, 2023
முதல்வர் காப்பீடு திட்ட கார்டு / CM NHIS Card
Monday, December 27, 2021
*கக்கன்*
Sunday, December 26, 2021
*ரேஷன் கார்டுகளில் ( RATION CARD) உள்ள சில குறியீடுகள்*
*தோழர் இரா. நல்லகண்ணு*
Sunday, January 28, 2018
*ந.க.எண். ,மூ.மு.எண். என்றால் என்ன?*
தமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்படும் ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். தொடர்பான தகவல்களை அறிய...⬇⬇⬇⬇⬇⬇⬇
*எலுமிச்சை*
பால. ரமேஷ்.
தினம் ஒரு தகவல்.
🎾எலுமிச்சை - இதை தேவக்கனி,
இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.
🎾எலி
மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ
இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.
🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.
🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.
🎾இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.
🎾இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.
🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.
🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.
🎾வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.
🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.
🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.
🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.
🎾சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.
🎾பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.
🎾தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.
🎾பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.
🎾உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.
🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.
🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.
🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.
🎾காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.
🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.
🎾தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.
🎾சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.
🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.
🎾தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.
🎾தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.
🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.
🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
🎾கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.
🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.
🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.
🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.
🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.
🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.
🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.
🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.
🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.
🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.
🎾முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.
🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.
🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.
🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.
🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.
🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.
🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.
🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.
🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.
🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.
Thursday, January 11, 2018
TNPSC ஊழல்
துணை கலெக்டர் பதவியை பிடிக்க…தமிழ்நாடு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளுக்கு 9 லட்ச ரூபாய் பணமும் 10 பவுன் நகையும் லஞ்சம் கொடுத்ததாக ராம்குமார் என்பவரை அதிரடியாக கைது செய்திருப்பது தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது.
துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட 74 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் நடந்த மோசடியை அம்பலப்படுத்தினோம். செக்ஷன் ஆபீசர் சிவசங்கரனைத் தொடர்ந்து புரோக்கர் குமரேசன், அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர் பெருமாள், மெயின் தேர்வில் 9 லட்ச ரூபாய் பணம், 10 பவுன் நகை லஞ்சம் கொடுத்த ராம்குமார் உள்ளிட்டவர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளது டி.சி. மல்லிகா தலைமையிலான மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ். இதனைத்தொடர்ந்து, 2016-ல் தேர்ச்சி பெற்ற 74 தேர்வர்களையும் எதிர் மனுதாரராக சேர்த்து குறுக்குவிசாரணை செய்யவேண்டும் என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் சூமோட்டோ வழக்காக எடுத்து அதிரடி உத்தரவிட, ஒட்டுமொத்த தமிழக அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை பற்றவைத்துக்கொண்டிருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் மோசடி நடந்திருப்பதாக திருநங்கை ஸ்வப்னா கார்த்திக் தொடர்ந்த வழக்கில் அதன் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், உள்துறைச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், பத்திரப்பதிவுத்துறைச் செயலாளர் ஆகியோரையும் எதிர் மனுதாரராக்கி உத்தரவிட்டிருந்தார் நீதிபதி. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா இதுவரை பதில் அளிக்கவில்லை. இதில், மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சிபெற்ற 74 பேரில் 64 பேர், ‘"கோச்சிங் சென்டர் மோசடி! –டி.என்.பி.எஸ்.சி தகிடுதத்தம்!'’ என்கிற தலைப்பில் 2017 டிசம்பர் 03-05 தலைப்பில் நக்கீரனில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த அப்பல்லோ ஸ்டடி சென்டரில் படித்தவர்கள் என்பதுதான் காவல்துறையின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு காக்கிகளிடம் விசாரித்தபோது, ""டி.என்.பி.எஸ்.சி. குறித்து நக்கீரனில் வெளியான கட்டுரையை விசாரணை அதிகாரிகளான நாங்களும் படித்தோம். அதில், அப்பல்லோ ஸ்டடி சென்டரின் இயக்குநர் சாம் இராஜேஸ்வரன் சில விளக்கங்களை கொடுத்துள்ளார். அதைவைத்தே, அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறோம். உதாரணத்துக்கு, 31 யூனிட் இருக்கிறது. எந்த கேள்வியாக இருந்தாலும் அதற்குள்தான் வரும் என்கிறார் சாம். ஆனால், நடப்பு நிகழ்வுகளுக்கான 20 சதவீத கேள்விகள் 31 யூனிட்டில் வராது. மேலும், எத்தனையோ பிரதமர்கள் இருக்க பாகிஸ்தான் பிரதமரை தகுதி நீக்கம் செய்தது ஏன்? என்று கேட்டது எப்படி? எத்தனையோ திட்டங்கள் இருக்க சௌபாக்யா திட்டம் என்றால் என்ன? என்று கேட்டது எப்படி? போன்ற கேள்விகள் அப்பல்லோ ஸ்டடி சென்டரின் மாதிரி தேர்வில் 2016 அக்டோபர் 5-ந் தேதி கேட்கப்பட்டிருக்கின்றன. அதே கேள்விகள், 15-ந் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வில் கேட்கப்பட்டது எப்படி?
2017 அக்டோபர்- 13, 14, 15-ந் தேதிகளில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வு நெருங்கும் நேரத்தில் 5, 6, 7-ந் தேதிகளிலேயே வினாக்களுடன் விடைகளும் கொடுத்தது எப்படி? பல கோணங்களில் விசாரித்தோம். திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. டி.என்.பி.எஸ்.சி. கேள்வித்தாள்களை கல்லூரிப் பேராசிரியர்கள்தான் தயாரிக்கிறார்கள். அந்தக் குழுவில் மிக முக்கியமானவர் சென்னை மாநிலக்கல்லூரி வேதியியல் பேராசிரியர் ஜெய்சங்கர். இவர், கடந்த 10 வருடங்களாக அப்பல்லோ கோச்சிங் சென்டரில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பவராகவும் உள்ளார். இவர்மூலமும் வினாத்தாள் முன்கூட்டியே லீக் அவுட் ஆகிறதா என்கிற கோணத்தில் விசாரிக்க இருக்கிறோம். மேலும், சில கல்லூரிப் பேராசிரியர்களை விசாரிப்போம்.
2007-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரை மூன்றுமுறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்மைத் தேர்வுகளில் முதல் மற்றும் இரண்டாம் தாளில் 10 ஆண்டுகளாக கேட்கப்படும் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டு மெயின் தேர்வில் மட்டும் டி.என்.பி.எஸ்.சி. கேட்கும் நடப்பு நிகழ்வுகளுக்கான கேள்விகளை அப்படியே கேட்க முடிந்தது எப்படி? சாம் இராஜேஸ்வரனின் அப்பல்லோ ஸ்டடி சென்டரில் பணம் கட்டி படித்து பாஸ் பண்ணிய 64 பேரும் சைதை துரைசாமியின் மனிதநேயம் அகடமியில் படித்ததுபோல் ஊடகங்களில் தவறாக விளம்பரம் கொடுப்பது ஏன்? அதை, கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
தற்போது, 2017 குரூப்-1 தேர்வில் இரண்டாவது இடம் பிடித்தவர் மணிராஜ். பொதுவாக, டாப் ரேங்கர்ஸ் அனைவரும் தன்னுடைய ஸ்டடி சென்டரில்தான் பாஸ் பண்ணிவிட்டு போகவேண்டும் என்று நினைப்பார் சாம். ஆனால், மணிராஜ் அப்பல்லோவில் படிக்கவில்லை. ஆனால், எப்படி இரண்டாவது ரேங் வாங்கினார் என்று விசாரித்தபோது அப்பல்லோ கோச்சிங் சென்டரில் படித்து தற்போது 7-வது ரேங்க் எடுத்த சதீஷ்குமாரும் இவரும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, டி.என்.பி.எஸ்.சி.யில் கேட்கப்போகும் முக்கியமான கேள்விகளை அப்பல்லோவில் படிக்கும் சதீஷ்குமார் தனது நண்பர் மணிராஜுக்கும் கொடுத்திருப்பாரோ என்கிற சந்தேகம் வலுத்திருக்கிறது.
மேலும், சதீஷ்குமார் 2015-லேயே தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி. ட்ரெயினிங்கில் இருக்கிறார். ஆனால், அவரது லட்சியமே துணை கலெக்டர் ஆவதுதான். அதனால்தான், 2016-ல் நடந்த தேர்வில் மீண்டும் எழுதி துணை கலெக்டர் பதவியை பிடிக்கும் அளவுக்கு தரவரிசை பட்டியலில் இடம்பெற்றிருந்தார். ஆனால், தற்போது 74 பேரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்ததால் எதுக்கு வம்பு? டி.எஸ்.பியாகவே தொடரலாம் என ட்ரெயினிங் போய்விட்டார் சதீஷ்குமார். தேர்ச்சி பெற்ற 74 பேரின் விடைத்தாள்கள் அனைத்துமே தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கமலா மாணிக்கத்தின் விடைத்தாளைப்போலவே எத்தனை விடைத்தாள்கள் வெளியில் எடுத்து மோசடியாக விடைகள் எழுதப்பட்டன என்பதை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். அதற்குப்பிறகு, சாம் இராஜேஸ்வரனை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டால் டி.என்.பி.எஸ்.சி.யின் ஊழல் உறுப்பினர்கள் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்''’என்கிறார்கள் அதிரடியாக.
லஞ்சம் கொடுத்து பதவியை பிடிக்கும் அதிகாரிகள்தான் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்யக் கற்றுக் கொடுத்து எந்த ஆட்சி மாறினாலும் மாறாமல் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதைவிட ஆபத்தானது அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது. ஊழல் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழல் துணை கலெக்டர்கள் தற்போது, கோடிகளை கொட்டிக்கொடுத்து நியமன ஐ.ஏ.எஸ். ஆவதற்கான ரேஸிலும் இருக்கிறார்கள். இதற்கென்று தனியாக விசாரணைக் கமிஷன் வைத்தால்தான் பல்வேறு உண்மைகள் வெளிவரும்.
Popular Posts
-
*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!* *♨️ சான்றிதழ்கள் 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ...
-
வணக்கம், ** TNPSC கொடுத்துள்ள உத்தேச விடையில் உள்ள தவறான விடைகளுக்கு எப்படி மெயில் அனுப்ப வேண்டும்? என்று ஒரு வினாவிற்கு மட்டும் தயாரித்து...
-
ஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம் G.O's REALTED TO TEACHERS & THEIR EXPLAINATION ...