Monday, September 14, 2026

AI-சாட்போட்டிடம் ஒருபோதும் பகிரக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள்! / Don't Share the 5 points with AI - CHATGPT

AI-சாட்போட்டிடம்  ஒருபோதும் பகிரக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள்!


ChatGPT, Claude, Gemini போன்ற AI கருவிகள் நம் வேலைகளை எளிதாக்கும் அற்புதமான உதவியாளர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பலரும் மறந்துவிடும் ஒரு கசப்பான உண்மை: AI என்பது உங்கள் பெர்சனல் டைரி அல்ல; அது உலகளாவிய சர்வர்களில் இயங்கும் ஒரு மெஷின்!

நீங்கள் உள்ளிடும் பிராம்ப்ட்கள் பல நிறுவனங்களின் சர்வர்களில் சேமிக்கப்பட்டு, எதிர்கால AI மாடல்களுக்குப் பயிற்சியளிக்க (Model Training) பயன்படுத்தப்படலாம் அல்லது தரவு கசிவு (Data Breach) ஏற்படும்போது பொதுவெளியில் அம்பலமாகலாம்.

AI-யிடம் ஒருபோதும் பகிரக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள் & மாற்று வழிகள்: 👇

🟢 1. 𝐏𝐀𝐒𝐒𝐖𝐎𝐑𝐃𝐒, 𝐀𝐏𝐈 𝐊𝐄𝐘𝐒 & 𝐋𝐎𝐆𝐈𝐍 𝐂𝐑𝐄𝐃𝐄𝐍𝐓𝐈𝐀𝐋𝐒 (கடவுச்சொற்கள் & லாகின் விவரங்கள்)
➜ The Danger: "இந்த கோடில் என் API Key சரியாக உள்ளதா?" என்றோ, "என் பாஸ்வேர்டை மாற்றி ஸ்ட்ராங் ஆக்கிக் கொடு" என்றோ அசல் கீகளை உள்ளிடுவது.

➜ The Fix:

➜ கோட் எழுதும்போது எப்போதும் போலி மதிப்புகளைப் பயன்படுத்துங்கள் (எ.கா: API_KEY="YOUR_KEY_HERE").

➜ கடவுச்சொற்களை உருவாக்க Bitwarden போன்ற பாஸ்வேர்ட் மேனேஜர்களின் இன்-பில்ட் ஜெனரேட்டர்களை மட்டுமே பயன்படுத்துங்கள். 🔑🚫

🔵 2. 𝐁𝐀𝐍𝐊𝐈𝐍𝐆 & 𝐅𝐈𝐍𝐀𝐍𝐂𝐈𝐀𝐋 𝐒𝐓𝐀𝐓𝐄𝐌𝐄𝐍𝐓𝐒 (வங்கி & பணப் பரிவர்த்தனை தகவல்கள்)
➜ The Danger: "என் வங்கி ஸ்டேட்மெண்ட்டைப் படித்து பட்ஜெட் போடு" என்று கிரெடிட் கார்டு எண்கள், CVV, அல்லது கணக்கு எண்களை அப்லோட் செய்வது.

➜ The Fix:

➜ எக்செல் அல்லது CSV ஃபைல்களை அப்லோட் செய்வதற்கு முன், உங்கள் பெயர், கணக்கு எண், வங்கி கிளை விவரங்களை நீக்கிவிட்டு (Anonymize), வெறும் எண்களை மட்டும் அப்லோட் செய்யுங்கள். 💳📊

🟡 3. 𝐆𝐎𝐕𝐄𝐑𝐍𝐌𝐄𝐍𝐓 𝐈𝐃𝐬 & 𝐏𝐄𝐑𝐒𝐎𝐍𝐀𝐋 𝐈𝐃𝐄𝐍𝐓𝐈𝐅𝐈𝐄𝐑𝐒 (ஆதார், பான் & பாஸ்போர்ட்)
➜ The Danger: ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் எண்கள், அல்லது வீட்டு முகவரியை இட்டு ரெஸ்யூம் அல்லது கவர் லெட்டர் எழுதச் சொல்வது.

➜ The Fix:

➜ ரெஸ்யூம் எழுதும்போது உங்கள் அசல் போன் நம்பர், முகவரிக்கு பதிலாக [Phone Number], [City, State] என்று பிளேஸ்ஹோல்டர்களைப் பயன்படுத்துங்கள்; அவுட்புட் வந்த பிறகு நீங்களே மேனுவலாக டைப் செய்யுங்கள். 🪪📝

🟣 4. 𝐂𝐎𝐍𝐅𝐈𝐃𝐄𝐍𝐓𝐈𝐀𝐋 𝐂𝐎𝐌𝐏𝐀𝐍𝐘 / 𝐂𝐋𝐈𝐄𝐍𝐓 𝐃𝐀𝐓𝐀 (அலுவலக & வாடிக்கையாளர் ரகசியங்கள்)
➜ The Danger: நிறுவனத்தின் வெளியிடப்படாத தயாரிப்பு உத்திகள், வாடிக்கையாளர்களின் பெயர்கள், அல்லது காப்புரிமை பெறாத வணிக ஐடியாக்களை முழுமையாக AI-ல் கொட்டுவது (சாம்சங் நிறுவன ஊழியர்கள் செய்த பெரும் தவறு இது!).

➜ The Fix:

➜ நிறுவனத்தின் பெயரை மாற்றிப் பொதுவான பெயராகவும் (எ.கா: "Company X"), க்ளையன்ட் விபரங்களை நீக்கியும் மட்டுமே வியூகங்களைக் கேளுங்கள். 🏢🤫

🔴 5. 𝐃𝐄𝐄𝐏 𝐏𝐄𝐑𝐒𝐎𝐍𝐀𝐋 / 𝐌𝐄𝐃𝐈𝐂𝐀𝐋 𝐑𝐄𝐂𝐎𝐑𝐃𝐒 (மருத்துவ & அந்தரங்கப் பிரச்சனைகள்)
➜ The Danger: உங்கள் அசல் பெயர் மற்றும் விபரங்களுடன் கூடிய மருத்துவ ரிப்போர்ட்டுகள் அல்லது மனரீதியான ரகசியங்களை உள்ளிடுவது.

➜ The Fix:

➜ அறிகுறி மற்றும் பொதுவான சந்தேகங்களை மட்டும் கேளுங்கள்; உங்கள் அடையாளத்தை AI-க்குக் காட்டாதீர்கள். 🩺🧬

💡 The Golden Privacy Rule:
➜ "நீங்கள் ஒரு தகவலை ஒரு வழிப்போக்கரிடம் அல்லது தெருவோர விளம்பரப் பலகையில் தைரியமாக எழுத மாட்டீர்கள் என்றால்... அதை ஒருபோதும் எந்த AI சாட்பாக்ஸிலும் டைப் செய்யாதீர்கள்!" 🌟👑

📌 தங்கள் அந்தரங்க டேட்டாவைத் தெரியாமல் AI-யிடம் பகிர்ந்துகொண்டிருக்கும் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுக்கு உடனே Save & Share செய்யுங்கள்!

Friday, September 19, 2025

மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான்

மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான்





_*மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான். பூஜியத்திற்கு முன்னாடி நம்பர் இருந்தால் கடவுள் தந்த பரிசு, பூஜியத்திற்கு பின்னாடி நம்பர் இருந்தால் அது கடவுள் கொடுக்கும் சோதனை அதற்கு மதிப்பு கிடையாது.*_

_நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம்._

_*மனமே பதற்றப்படாதே மெல்ல, மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை அனைத்திற்கும் பதில் தரும் அதற்கு கால தாமதமாகலாம் ஆனால் ஒரு போதும் தோற்றுப்போகாது.*_ 

_எனவே இருப்பதை வைத்து திருப்தி அடைவது இல்லாததை இனி கடவுள்_ _கொடுப்பாராக என_ _நம்பிக்கையோடு கடந்து சென்று_
_வாழ்க்கையை_ _சுகமாக்கி_ _கொள்ளுங்கள்._

_*A rare Skill Can help you pay more bills than usual*_

Thursday, August 21, 2025

TNUSRB Sub Inspector Exam Selection New Procedure / சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆட்சேர்ப்பு – உச்சநீதிமன்ற உத்தரவு & அரசின் நடைமுறை

சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆட்சேர்ப்பு – உச்சநீதிமன்ற உத்தரவு & அரசின் நடைமுறை


*எஸ். ஐ. தேர்வு புதிய நடைமுறை அமலுக்கு வந்தது காவல்துறை ஒதுக்கீடு கிடையாது என அரசாணையில் தகவல் - இனி அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு நாளிதழ் செய்தி வெளியீடு*







1. ஒதுக்கீடு

80% Open Quota (பொது மக்கள்)

20% Departmental Quota (பணியில் உள்ள போலீஸ் பணியாளர்கள்)

2. தேர்வு முறை

இனிமேல் ஒரே பொதுத்தேர்வு (Common Exam) மட்டும் நடக்கும்.

இருவரும் (Open + Departmental) ஒரே தேர்வில் பங்கேற்க வேண்டும்.

3. மூத்தத்துவம் (Seniority)

Seniority தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

Departmental / Open என்று தனித்த seniority இனிமேல் இருக்காது.

Seniority பட்டியல் புதியதாக திருத்தப்படும்.

4. பழைய பட்டியல் (1995–இருந்து)

பழைய seniority பட்டியல் திருத்தப்படும்.

ஏற்கனவே பதவி உயர்வு (Promotion) பெற்றவர்கள் அந்த நிலைமையில் தொடர்வார்கள்.

Promotion திரும்பப் பெறப்படமாட்டாது.

5. உச்சநீதிமன்ற உத்தரவு (முக்கிய புள்ளிகள்)

60 நாட்களுக்குள் புதிய seniority பட்டியல் தயாரிக்க வேண்டும்.

பழைய பட்டியல் அடிப்படையில் கொடுக்கப்பட்ட பதவி உயர்வுகளை ரத்து செய்யக்கூடாது.

100% ஆட்சேர்ப்பு ஒரே common exam மூலம் நடத்த வேண்டும்.

Departmental + Open quota வேறுபாடு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் நிர்ணயிக்கப்படும்.

6. அரசின் முடிவு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இனி SI ஆட்சேர்ப்பு TNUSRB (Tamil Nadu Uniformed Services Recruitment Board) மூலம் Common Exam மூலமாகவே நடத்தப்படும்.

20% Departmental + 80% Open சேர்த்து ஒரே தேர்வு.

மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் seniority நிர்ணயிக்கப்படும்.

புதிய விதிகள் / நடைமுறைகள் வெளியிடப்படும்.

7. நடைமுறைக்கு வரும் உத்தரவு

Director General of Police (DGP) பரிந்துரையின்படி, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) அடுத்தடுத்த SI ஆட்சேர்ப்புகளுக்கு இந்த புதிய நடைமுறையை பின்பற்றும்.

---

👉 சுருக்கமாக:
இனிமேல் சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆட்சேர்ப்பு 20% departmental quota + 80% open quota சேர்ந்து ஒரே பொதுத்தேர்வில் நடைபெறும். Seniority பட்டியல் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும். பழைய பட்டியல் திருத்தப்படும், ஆனால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட promotions ரத்து செய்யப்படமாட்டாது.

Wednesday, August 20, 2025

50 Government Services by Whatsapp / *வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள்*

*❇️செய்தி கதம்பம்*❇️
*வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள்* 





முதல் கட்டமாக 50 அரசு சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்ப துறை திட்டம்

இதற்காக மெட்டா  நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

50 சேவைகளின் விவரம்
⬇️⬇️⬇️






முதல் கட்டமாக 50 சேவைகள் 


Monday, July 14, 2025

E - Pettagam / E பெட்டகம் மூலம் சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்

*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!*



*♨️ சான்றிதழ்கள் 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம்.*

*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!*

*E-பெட்டகம் இணையதளத்தில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E- பெட்டகம் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015 ஆம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது.


Wednesday, November 15, 2023

கந்த சஷ்டி கவசம் / Kantha Sasti Kavasam

கந்த சஷ்டி கவசம் 
நம்மை காக்கும் தெய்வமான முருக பெருமானை நோக்கி பால தேவராயன சுவாமிகள் பாடியது தான் “ கந்த சஷ்டி கவசம் ”.





இந்த கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது. சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் என்றாலே அவர்களின் குரலும் சேர்ந்தே நம் மனதில் வந்து போகும்...

கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக 

ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விழி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!

இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!